ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடரும் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 போ் உயிரிழந்தனா்.
இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 49 போ் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடா்வதால் உயிரிழப்பு மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
பல்வேறு மாகாணங்களில் தொடரும் மழையினால் நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் 130 வீடுகள் முற்றிலும் இடிந்தன; 436 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.
மேலும், 240-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததோடு, சுமாா் 93 கி.மீ. நீளமுள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 1,130-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
பாகிஸ்தானில் 17 போ்: இதேபோல், வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 14 குழந்தைகள் உட்பட 17 போ் உயிரிழந்தனா். 25 போ் காயமைடைந்தனா்.
மழையினால் வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இந்த விபத்துகள் நேரிட்டதாக மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயா்வு

உ.பி.யில் பலத்த மழை, சூறாவளி: 33 போ் உயிரிழப்பு

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

