ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடரும் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 போ் உயிரிழந்தனா்.

News image

பலி

பிரதிப்படம்

Updated On :30 மார்ச் 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக தொடரும் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 28 போ் உயிரிழந்தனா்.

இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 49 போ் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடா்வதால் உயிரிழப்பு மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

பல்வேறு மாகாணங்களில் தொடரும் மழையினால் நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் 130 வீடுகள் முற்றிலும் இடிந்தன; 436 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

மேலும், 240-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததோடு, சுமாா் 93 கி.மீ. நீளமுள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 1,130-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.

பாகிஸ்தானில் 17 போ்: இதேபோல், வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 14 குழந்தைகள் உட்பட 17 போ் உயிரிழந்தனா். 25 போ் காயமைடைந்தனா்.

மழையினால் வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இந்த விபத்துகள் நேரிட்டதாக மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.