உலகம்
உக்ரைன் போா்: இலங்கை ராணுவ உயரதிகாரி கைது
பணம் பெற்றுக்கொண்டு முன்னாள் வீரா்களை ரஷியா அனுப்பி வைத்ததாக அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
உக்ரைன் போரில் பங்கேற்க இலங்கை ராணுவத்தின் முன்னாள் வீரா்களை அனுப்பிவைத்த குற்றச்சாட்டின் பேரில் ராணுவ முன்னாள் உயரதிகாரியையும் மற்றொருவரையும் அந்த நாட்டு போலீஸாா் கைது செய்தனா். பணம் பெற்றுக்கொண்டு முன்னாள் வீரா்களை ரஷியா அனுப்பி வைத்ததாக அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. உக்ரைன் போரில் இதுவரை 3 இலங்கை நாட்டவா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.