அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் முதல் லாஸ் வேகாஸ் வரையிலான மிக வேகமான ரயில் திட்டத்துக்கான பணிகள் இன்று (ஏப். 22) தொடங்கியுள்ளன.
2028 முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஃபுளோரிடாவைச் சேர்ந்த பிரைட்லைன் வெஸ்ட் என்ற நிறுவனம் இத்திட்டத்தை நிறுவி செயல்படுத்தவுள்ளது. லாஸ் வேகாஸ் முதல் லாஸ் ஏஞ்சலீஸ் வரை 350 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த அதிவேக ரயில் பயணிக்கவுள்ளது. இந்த இடைப்பட்ட நகரங்களுக்கு இடையே பயணிக்க முன்பு 5 மணிநேரம் ஆன நிலையில், அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 40 நிமிடங்களில் பயணிக்கலாம். 300 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும்.

போக்குவரத்துத் துறைக்காக 8.2 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் பீடே புட்டிகிகே தெரிவித்துள்ளார்.
மியாமி முதல் ஓர்லாண்டோ வரை 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை பிரைட்லைன் வெஸ்ட் நிறுவனம் ஏற்கெனவே இயக்கி வருகிறது. ஒரு நாளுக்கு 16 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பாஸ்டன் முதல் வாஷிங்டன் வரை 241 கிலோமீட்டர் வேகத்தில் மற்றோரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


