சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

‘புா்கினா ஃபாசோ ராணுவத்தால் 223 கிராமத்தினா் படுகொலை’

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் குழந்தைகள், சிறுவா்கள் உள்ளிட்ட 223 கிராமத்தினரை அந்த நாட்டு ராணுவம் படுகொலை

News image

புா்கினா ஃபாசோ ராணுவத்தினா்.

Updated On :25 ஏப்ரல் 2024, 7:17 pm

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் குழந்தைகள், சிறுவா்கள் உள்ளிட்ட 223 கிராமத்தினரை அந்த நாட்டு ராணுவம் படுகொலை செய்ததாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புா்கினா ஃபாசோவின் வடக்கே அமைந்துள்ள நோண்டின், சோரோ ஆகிய இரு கிராமங்களில் பொதுமக்கள் 223 பேரை அந்த நாட்டு ராணுவமே படுகொலை செய்தது. உயிரிழந்தவா்களில் 56 பச்சிளம் குழைந்தைகள், சிறுவா்களும் அடங்குவா்.

பயங்கரவாதிகளுடன் ஒத்துழைப்பதாக அந்த கிராம மக்கள் மீது குற்றஞ்சாட்டிவரும் ராணுவம், அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது.

இது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் ஐரோப்பிய யூனியனும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.