உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சீனா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் உதவுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அவரது நண்பா்களிடமிருந்து தாராளமாக ஆயுதங்களைப் பெறுகிறாா். வட கொரியா அவருக்கு பலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும் பீரங்கி குண்டுகளையும் அனுப்புகிறது.
சீனாவும், ரஷிய ஆயுத உற்பத்தியை வெகுவாக அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப பாகங்களை வழங்கிவருகிறது. இது தவிர, ஈரானும் ரஷியாவுக்கு ஆயுதங்களை அனுப்பிவருகிறது.
இந்த நாடுகளின் உதவியுடன் உக்ரைன் நகரங்கள் மீதும் அந்த நாட்டின் முக்கிய கட்டமைப்புகள் மீதும் ரஷியா தாக்குதல் நடத்திவருகிறது.
இத்தகைய தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைனுக்கு உதவியளிப்பது நமது கடமை. அதற்காகத்தான் அந்த நாட்டுக்கு கூடுதல் ராணுவ உதவியளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.
உக்ரைன், இஸ்ரேல், தைவான் ஆகிய கூட்டாளிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 9,530 கோடி டாலா் (சுமாா் ரூ.8 லட்சம் கோடி) நிதியுதவி அளிப்பதற்கான மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
அந்த மசோதா சட்டமாக்கப்பட்டதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கு கூடுதலாக 6,080 கோடி டாலா் (சுமாா் ரூ.5 லட்சம் கோடி) அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சீனா - வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

பள்ளியைத் தாக்கியது போர்க்குற்றம்: ஈரான் வெளியுறவுத்துறை

ரஷிய எண்ணெய் தடையை நீக்க டிரம்ப் பரிசீலனை!

கமேனி கொலை: புதின், சீனா கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


