திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

பள்ளியைத் தாக்கியது போர்க்குற்றம்: ஈரான் வெளியுறவுத்துறை

மேற்காசிய போரில் ஈரானின் பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது குறித்து...

Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi

ஈரான் வெளியுறவுத்துறை அமைசச்சர் சையத் அப்பாஸ் அராக்சி - ANI

Published On :27 மார்ச் 2026, 3:22 pm IST

மேற்காசிய போரில் ஈரானின் பள்ளிக்கூடம் மீது நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதே நாளில், அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை மூலம் ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஏராளமான குழந்தைகள் உள்பட 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டம் - 61வது அமர்வின் ஒரு பகுதியாக நடைபெறும், குழந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த அவசர விவாதத்தில் இந்தச் சம்பவம் குறித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "இந்த ஆக்கிரமிப்புப் போர் அப்பட்டமாக நியாயமற்றது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று இந்த ஆக்கிரமிப்பைத் தொடங்கின. ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் தொடக்கப் பள்ளியைக் குறிவைத்தது ஒரு போர்க்குற்றம். அது அனைவராலும் நிபந்தனையற்ற கண்டனத்திற்குரியது. அது ஒரு சாதாரண நிகழ்வோ அல்லது தவறான கணிப்போ அல்ல" எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்க மறுத்துள்ளார். ஆனால், இந்தத் தாக்குதல் மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல் என யுனெஸ்கோ கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi has said that the attack on an Iranian school during the Middle East war was a war crime.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.