பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 4:02 pm

DIN

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 20ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 போ் பலியாகினர். அவா்களில் 18 போ் குழந்தைகள். அதில், ராஃபா நகரில் வசித்து வந்த கர்ப்பிணியான சாப்ரி அல்-சகானி என்ற பெண்மணியின் வீடு, இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் தரைமட்டமானது. இந்த தாக்குதலில், அந்த வீட்டில் வசித்து வந்த அவருடைய கணவரும், 3 வயது மகளும் பலியாகினர்.

இந்த நிலையில், தலையில் பலத்த காயமடைந்த சாப்ரி அல்-சகானி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஃபா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை காப்பாற்றுவது இயலாத காரியம் என தெரிவித்துவிட்ட நிலையில், அவருடைய கருப்பையிலிருந்து குழந்தையை காப்பாற்ற முயற்சித்தனர்.

இதையடுத்து, 30 வார கர்ப்பிணியான சாப்ரி அல்-சகானிக்கு அவசரகால அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பெண் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்பட்டது. சப்ரின் ஜௌடா என்ப் பெயரிடப்பட்டஅந்த பெண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால், இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் 3 முதல் 4 வாரங்கள் அந்த குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது அந்தக் குழந்தையும் 5 நாட்களுக்கு பிறகு நேற்று பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் அதன் காரணமாகவே குழந்தை பலியானதாகவும் மருத்துவர் முகமது சலாமா தெரிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் போது அதன் எடை 1.4 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்டவர்களில் மூன்றில் 2 பங்கினர் குழந்தைகளும் பெண்களும் ஆவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.