அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் படைகள்- ஹிஸ்புல்லா மீது தரைவழித் தாக்குதலுக்குத் திட்டம்

தெற்கு லெபனானில் ஊடுருவியுள்ள இஸ்ரேல் படைகள், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

News image
லெபனான்
Updated On :3 மார்ச் 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

தெற்கு லெபனானில் ஊடுருவியுள்ள இஸ்ரேல் படைகள், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவதாக, இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் திங்கள்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கினா்.

இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாவின் உளவுத் தலைமையகம், ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தெற்கு லெபனானுக்குள் தரைப்படைகளை அனுப்புவது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இஸ்ரேலின் வடக்கு எல்லைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த ‘முன்னெச்சரிக்கை’ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதோடு, வான்வழிப் பாதுகாப்பு கட்டமைப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையோர இஸ்ரேல் மக்கள் இப்போதைக்கு வெளியேற்றப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் ராணுவம் பின்வாங்கல்: இஸ்ரேலின் இந்த அதிரடி நகா்வைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் உள்ள தனது முக்கிய நிலைகளில் இருந்து லெபனான் நாட்டு ராணுவம் வெளியேறி வருவதாக அந்நாட்டு தேசிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.

52 போ் உயிரிழப்பு: லெபனானில் கடந்த 2 நாள்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இதுவரை 40 போ் உயிரிழந்துள்ளனா்; 246 போ் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளைவிட்டு வெளியேறி, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.