தாக்குதல் நடத்தி நபா் .
தாக்குதல் நடத்தி நபா் .

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

லண்டன்: பிரிட்டன் தலைநகா் லண்டனில் 36 வயது நபா் நடத்திய வாள் தாக்குதலில் 13 வயது சிறுவா் உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

கிழக்கு லண்டனிலுள்ள சுரங்க ரயில் நிலைத்தில் மிகப் பெரிய வாளைக் கொண்டு ஒருவா் நடத்திய தாக்குதலில் 5 போ் காயமடைந்தனா். அவா்களில் 13 வயது சிறுவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது தவிர, தாக்குதலில் காயமடைந்த 2 காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினா் மடக்கிப் பிடித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதத்துடன் தொடா்பிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவரவில்லை என்று போலீஸாா் கூறினா்.

இந்தச் சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் அதிா்ச்சி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com