வங்கதேசத்தில் கலவரத்தில் ஹோட்டலுக்கு தீவைக்கப்பட்டதால் 24 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கதேசத்தில் கலவரத்தின்போது, அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷாஹின் சக்கலாடர் என்பவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலின் தரைத்தளத்தில் வைக்கப்பட்ட தீ, அதிவேகமாக மேல் தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டலினுள்ளே தங்கியிருந்தவர்களில் 24 பேர் பலியாகியுள்ளனர்; உயிரிழந்தவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
அதுமட்டுமின்றி, ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், அவாமி கட்சியின் மத்திய அலுவலகம், அவாமி கட்சியின் பல தலைவர்களின் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், அவாமி கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேகமாகப் பரவும் எபோலா: காங்கோவில் 930 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவுக்கு 16 பேர் பலி
இன்றைய செய்திகள் ஜூலை 17 - நேரலை

இலங்கை சிறைச்சாலை கலவரத்தில் 25 பேர் பலி! தமிழக மீனவர்களின் நிலை என்ன?
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0





