பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

மேற்கு வங்கத்தை பின்பற்ற எந்த மாநிலமும் விரும்பாது: அமித் ஷா

திரிணாமுல் எம்.பி.யின் கேள்வியை விமர்சித்த அமித் ஷா.

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2024, 3:35 pm IST

மக்களவையில் திரிணாமுல் எம்.பி.யின் கேள்வியை விமர்சித்து பதிலளித்தார் அமித் ஷா.

புது தில்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சௌகதா ராய் ``இடதுசாரிகளின் தீவிரவாதத்தை மேற்கு வங்க அரசுதான் வெற்றிகரமாக சமாளித்து வருகிறது.

மேற்கு வங்கத்தின் இந்த நிர்வாக மாதிரியை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களிலும் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, ``வடகிழக்கு மாநிலங்களில் 60 சதகிதத்துக்கும் அதிகமாக வன்முறை குறைந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றிகரமான நிர்வாக மாதிரிகளை செயல்படுத்துவதில் பிரதமர் மோடியிலான அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இருப்பினும், மேற்கு வங்க மாதிரியை செயல்படுத்த எந்த மாநிலமும் விரும்பாது என்று நான் கருதுகிறேன்" என்று பதிலளித்தார்.

பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் முரண்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.