இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மேற்கு வங்கத்தை பின்பற்ற எந்த மாநிலமும் விரும்பாது: அமித் ஷா

திரிணாமுல் எம்.பி.யின் கேள்வியை விமர்சித்த அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப் படம்)

Published On :

மக்களவையில் திரிணாமுல் எம்.பி.யின் கேள்வியை விமர்சித்து பதிலளித்தார் அமித் ஷா.

புது தில்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சௌகதா ராய் ``இடதுசாரிகளின் தீவிரவாதத்தை மேற்கு வங்க அரசுதான் வெற்றிகரமாக சமாளித்து வருகிறது.

மேற்கு வங்கத்தின் இந்த நிர்வாக மாதிரியை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களிலும் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, ``வடகிழக்கு மாநிலங்களில் 60 சதகிதத்துக்கும் அதிகமாக வன்முறை குறைந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றிகரமான நிர்வாக மாதிரிகளை செயல்படுத்துவதில் பிரதமர் மோடியிலான அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இருப்பினும், மேற்கு வங்க மாதிரியை செயல்படுத்த எந்த மாநிலமும் விரும்பாது என்று நான் கருதுகிறேன்" என்று பதிலளித்தார்.

பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் முரண்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.