டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சமூக ஆர்வலராகவும் உளவாளியாகவும் இரட்டை வாழ்க்கை! அமெரிக்காவில் சீன உளவாளி!

அமெரிக்காவை 28 ஆண்டுகளாக உளவு பார்த்த சீன நாட்டைச் சேர்ந்தவர் கைது

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சீனாவைச் சேர்ந்தவர், சுமார் 28 ஆண்டுகளாக உளவு பார்த்து வந்துள்ளார்.

சீனாவில் பிறந்த ஷுஜுன் வாங், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, 1994 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். ஷுஜுன், அமெரிக்காவில் தன்னை ஒரு கல்வியாளராகவும் சமூக ஆர்வலராகவும் வெளிக்காட்டிக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சீனாவுக்காக அமெரிக்காவை ஷுஜுன் உளவு பார்ப்பதாக, அமெரிக்க வழக்குரைஞர்கள் 2022 ஆம் ஆண்டில் ஷுஜுன்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, ஷுஜுனிடம் அமெரிக்க வழக்கறிஞர் எலன் சைஸ் விசாரணை மேற்கொண்டதில், சீனாவை எதிர்க்கும் நபர்களுடன் நெருக்கமாக இருப்பதற்காக, ஷுஜுன் சீன அரசை எதிர்ப்பதுபோல பாசாங்கு செய்ததும், பின்னர் சீனாவை எதிர்க்கும் நபர்களையும் தகவல்களையும் சீனாவுக்கு உளவு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பானது, 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 9 ஆம் தேதியில் வழங்கப்படும் என்று தெரிகிறது; குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.