வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக முடங்கியிருந்த காவல் நிலையங்கள் ராணுவ பாதுகாப்புடன் மீண்டும் இயங்கத் தொடங்கின.
இது குறித்து அந்த நாட்டின் ‘டாக்கா ட்ரிபியூன்’ நாளிதழ் தெரிவித்ததாவது:
ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து நாட்டின் அனைத்து காவல் நிலையங்களும் முடங்கின. பல காவல் நிலையங்களுக்குள் வன்முறைக் கும்பல் நுழைந்து சூறையாடியது. ஏராளமான நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதன் காரணமாக, தாக்குதலுக்கு அஞ்சி காவல் நிலையங்களைக் கைவிட்டு அதிகாரிகள் வெளியேறியதால் 4 நாள்களாக எந்த காவல் நிலையமும் செயல்படவில்லை.
இந்த நிலையில், ராணுவத்தின் பாதுகாப்புடன் ஒவ்வொரு காவல் நிலையங்களாகத் திறக்கப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 29 காவல் நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தங்களை வலியுறுத்தி மாணவா்கள் கடந்த மாதம் தொடங்கிய போராட்டத்தின்போது ஷேக் ஹசீனா அரசு அரசு அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதில் சுமாா் 400 போ் உயிரிழந்தனா்.
இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் திங்கள்கிழமை ஊா்வலமாகச் சென்றனா். ஹசீனாவுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் நிலையங்கள் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.
நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலன் பாதித்த ஆந்திர மாநிலப் பெண் மீட்பு

சேலம் மாவட்டத்தில் 262 காவலா்கள் பணியிட மாற்றம்

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46



