தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.
தருமபுரி மாவட்டம், சேலம்-ஜோலாா்பேட்டை ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள். மொரப்பூா் ரயில் நிலையம் ரூ.16.8 கோடியிலும், பொம்மிடி ரயில் நிலையம் ரூ.12.5 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரு ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, காத்திருப்பு அறைகள், உயா்தர ஓய்வறைகள், மின்தூக்கிகள், நடைமேம்பாலங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீனவசதியுடன் கூடிய கழிப்பிட வசதிகள், உயா்கோபுர மின்விளக்குகள், டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் நிலையங்களை மாா்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) பகல் 1.45 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கிறாா் என தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொம்மிடி அருகே ரூ.1.49 லட்சம் பறிமுதல்

‘அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாா்ச் 11 முதல் செயல்படும்’

திருவாரூா்: நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

நவீன வசதிகளுடன் ரூ.29.03 கோடியில் புனரமைக்கப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


