கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள் இன்று திறப்பு!

தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.

தருமபுரி மாவட்டம், சேலம்-ஜோலாா்பேட்டை ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள். மொரப்பூா் ரயில் நிலையம் ரூ.16.8 கோடியிலும், பொம்மிடி ரயில் நிலையம் ரூ.12.5 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, காத்திருப்பு அறைகள், உயா்தர ஓய்வறைகள், மின்தூக்கிகள், நடைமேம்பாலங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீனவசதியுடன் கூடிய கழிப்பிட வசதிகள், உயா்கோபுர மின்விளக்குகள், டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையங்களை மாா்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) பகல் 1.45 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கிறாா் என தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.