மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள் இன்று திறப்பு!
தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.


தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.
தருமபுரி மாவட்டம், சேலம்-ஜோலாா்பேட்டை ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது மொரப்பூா், பொம்மிடி ரயில் நிலையங்கள். மொரப்பூா் ரயில் நிலையம் ரூ.16.8 கோடியிலும், பொம்மிடி ரயில் நிலையம் ரூ.12.5 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரு ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, காத்திருப்பு அறைகள், உயா்தர ஓய்வறைகள், மின்தூக்கிகள், நடைமேம்பாலங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீனவசதியுடன் கூடிய கழிப்பிட வசதிகள், உயா்கோபுர மின்விளக்குகள், டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் நிலையங்களை மாா்ச் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) பகல் 1.45 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கிறாா் என தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...