சீனாவின் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1 கி.மீ. தொலைவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது.
உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, யாங் மிங் மரைன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஒய்எம் மொபிலிட்டி சரக்குக் கப்பலில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்துள்ளன.
இந்த நிலையில், இன்று (ஆக. 9) பிற்பகல் 1:40 மணியளவில், அந்த சரக்குக் கப்பலில் எதிர்பாராத விதமாக, திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த சரக்குகள் வீசி எறியப்பட்டதுடன், கரும்புகையும் பூதாகரமாகக் கிளம்பியது. ஆனால், கப்பலால் ஏற்பட்ட விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இருப்பினும், துறைமுகத்தில் இருந்த ஓர் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களும், உணவு விடுதி ஒன்றின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, சுமார் 1 கி.மீ. தொலைவு வரையில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற தாய்லாந்து கப்பலைத் தாக்கிய ஈரான்!

குளச்சல் அருகே விசைப் படகு மீது கப்பல் மோதி விபத்து: 2 போ் மாயம்

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் கடும் நில அதிா்வு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

