உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி!

துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் பலி.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:25 pm IST

துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை இன்று (ஆக. 12) அறிவித்தது.

ஆபரேஷன் கிளா-லாக் என்னும், வடக்கு இராக் எல்லை மீதான நேர வரம்பற்ற துருக்கி படையினரின் ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1980-களில் இருந்து துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த அமைப்புக்கு சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி கூறி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடக்கு இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியினரின் மறைவிடங்கள், தளங்கள் மீது துருக்கி படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் இறந்ததாக இராக் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் கிளா-லாக்கை 2022 ஏப்ரல் மாதத்தில் துருக்கி படையினர் தொடங்கினர். அதுமுதல் மெடினா, ஸாப், அவாசின் - பாஸ்யன் ஆகிய துருக்கி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.