திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

News image

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:35 pm IST

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே போா்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பதிவான மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

அன்சாா் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேரும், டேய்ா் அல்-சஹ்ரானி கிராமத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 4 பேரும் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மேலும், இத்தாக்குதல்களில் காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், தெற்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளைப் பலவீனப்படுத்துவதாகவும் லெபனான் பிரதமா் நவாப் சலாம் கண்டனம் தெரிவித்தாா். ‘இத்தாக்குதலில் கொல்லப்பட்டவா்கள் யாரும் எந்தப் பட்டியலிலும் ராணுவ இலக்குகள் அல்ல’ என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

ஆனால், இஸ்ரேல் படைவீரா்கள் மீதான நடவடிக்கைக்குப் பதிலடியாகவே, ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டமைப்புகளைத் தாக்கியதாக அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவது மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதத்தைக் கைவிட செய்வது தொடா்பாக இருதரப்புக்கும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலின் தொடா் அத்துமீறல்களுக்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த மாா்ச்சில் தொடங்கிய இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில், லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.

Summary

Israeli airstrike in southern Lebanon

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.