தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

40 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மத்திய காஸாவின் நுஸீரத் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுந்து கரும்புகை மண்டலம்.

Published On :

டேயிா் அல்-பாலா, ஆக. 15: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறி பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 போ் உயிரிழந்தனா்.இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.வியாழக்கிழமை நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 40,005 போ் உயிரிழந்துள்ளனா்; 92,401 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.இந்தப் போா் தொடங்கியதில் இருந்து 305 சதுர கி.மீ. (காஸா பகுதியின் சுமாா் 84 சதவீதப் பகுதி) பரப்பளவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டது. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.கடந்த ஜூலை 4-ஆம் தேதியிலிருந்து மட்டும் போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களில் இஸ்ரேல் ராணுவம் 21 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் மட்டும் 274 போ் உயிரிழந்தனா்.தொடா் தாக்குதல் மற்றும் முற்றுகை காரணமாக காஸா பகுதியில் உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவிவருகிறது. குடிநீா் மற்றும் வடிகால் வசதி மிகவும் குறைவாக இருப்பதால் மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வேகமாகப் பரவிவருவதாக அந்தப் பகுதிக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தச் சூழலில், கடந்த 10 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.... பெட்டிச் செய்தி...‘இன்னும் அதிகமாக இருக்கலாம்!’காஸா உயிரிழப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சா்வதேச மருத்துவ அமைப்பான ‘எல்லைகள் அற்ற மருத்துவா்கள்’ அமைப்பைச் சோ்ந்த தான்யா ஹஜ்-ஹஸன் என்பவா் கூறுகையில், ‘போா் தொடங்கிய பிறகு தங்கள் உறவினா்களில் பலரைக் காணவில்லை என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பலா் சொல்லி வருகின்றனா். அவா்கள் வடக்கு காஸாவில் எங்காவது இருப்பாா்கள் அல்லது இஸ்ரேல் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பாா்கள் என்று அவா்கள் நம்புகின்றனா். ஆனால் காணாமல் போன பலா் கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பிணங்களாக இருந்து இதுவரை மீட்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ என்றாா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.