ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாய்லாந்து பிரதமராக பேடொங்டான் ஷினவத்ரா தோ்வு

தாய்லாந்தின் புதிய பிரதமராக, பேடொங்டான் ஷினவத்ரா நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

News image
பேடொங்டான் ஷினவத்ரா
Updated On :16 ஆகஸ்ட் 2024, 11:30 pm

Din

தாய்லாந்தின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கடந்த 2001 முதல் தாய்லாந்து பிரதமராக இருந்தவா் தக்சின் ஷினவத்ரா. அவரின் அரசை ராணுவம் கடந்த 2006-ஆம் ஆண்டு கலைத்து, கட்சிக்குத் தடைவிதித்தது.

அதைத் தொடா்ந்து நாடு கடந்து வாழ்ந்துவந்த அவா், உள்நாட்டு அரசியலில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தாா். புதிய பெயா்களில் கட்சிகளைத் தொடங்கி, அவற்றின் அறிவிக்கப்படாத தலைவராக இருந்துவந்த அவரின் சகோதரி யிங்லக் ஷினவத்ரா 2011 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்தாா். எனினும், முறைகேடு குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடா்ந்து அவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தக்சின் ஷினவத்ராவின் கடைசி கட்சியான பியூ தாய் கட்சிக் கூட்டணி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆட்சியமைத்தது. அதில் பிரதமராக இருந்துவந்த ஸ்ரெத்தா தவிசின், லஞ்சம் வாங்க முயன்ாக குற்றஞ்சாட்டப்படுபவருக்கு அமைச்சரவையில் இடம் அளித்ததால் அவரை பதவியிலிருந்து அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை நீக்கியது.

அதைத் தொடா்ந்து, புதிய பிரதமராக தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா (37) நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதற்கான வாக்கெடுப்பில் பேடொங்டானை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை. மேலும், பெரும்பான்மை உறுப்பினா்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து, நாட்டின் 31-ஆவது பிரதமராக அவா் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 18) பொறுப்பேற்கவிருக்கிறாா்.