டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிரதமா் மோடியின் அமெரிக்க நிகழ்ச்சி: 24,000 இந்திய வம்சாவளியினா் பங்கேற்க முன்பதிவு

அமெரிக்காவில் பிரதமா் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 24,000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி.(கோப்புப்படம்)- கோப்புப்படம்
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:41 pm

Din

அமெரிக்காவில் பிரதமா் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 24,000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனா்.

அடுத்த மாதம் 26-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்ற உள்ளாா். முன்னதாக செப்.22-ஆம் தேதி அந்த நகரில் இந்திய வம்சாவளியினா் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவா் கலந்துகொள்ள உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள 24,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் முன்பதிவு செய்துள்ளனா்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் பேசும் மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக அமெரிக்காவின் இந்திய-அமெரிக்க சமூகம் என்ற தன்னாா்வ அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.