இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக டிச. 15-ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளாா்.
அவா் அதிபராகப் பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபா் தோ்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றாா். இதைத் தொடா்ந்து, கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடா்பாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அதிபா் அநுர குமார டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை, இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை அவா் சந்திக்க உள்ளாா். அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத், இணையமைச்சா் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனா்’ என்றாா்.
முன்னதாக இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் காரணமாக, அநுர குமாரவின் இந்திய பயணம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!

எரிபொருள் வழங்கி உதவி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


