

தைவானில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர்.
தைவான் நாட்டின் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில் தீவிபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தின் உணவு பதப்படுத்தும் பிரிவில் ஏற்பட்ட தீ, கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து கட்டடத்தை வெளியேறியிருந்தாலும், சிலர் வெளியேற முடியாமல் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்புப் படையினருக்கு விரைந்து வந்து, தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இருந்தபோதிலும், எதிர்பாராதவிதமாக இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் பஞ்சுபோன்ற பொருள்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!

ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு

ஆந்திரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

