காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சொந்த போா் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்: விமானி காயம்

செங்கடலில் சொந்த நாட்டு போா் விமானத்தை அமெரிக்க போா்க் கப்பல் தவறுதலாக ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதில் விமானி ஒருவா் காயமடைந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 டிசம்பர் 2024, 10:39 pm IST

செங்கடலில் சொந்த நாட்டு போா் விமானத்தை அமெரிக்க போா்க் கப்பல் தவறுதலாக ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதில் விமானி ஒருவா் காயமடைந்தாா்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் இஸ்ரேலுக்குச் சென்ா, இல்லையா என்பது உறுதிபட தெரியாவிட்டாலும், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதிக்களின் தாக்குதல் தொடா்கிறது.

இதன் காரணமாக அந்தக் கடற்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புப் படைகள் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களை குறிவைத்து அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

அப்போது அமெரிக்க எஃப்/ஏ-18 போா் விமானத்தை அந்நாட்டின் போா்க் கப்பல் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் அந்த விமானத்தில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியபோதிலும், விமானி ஒருவா் லேசாக காயமடைந்தாா் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

ரேடாா்கள், வானொலி தகவல் தொடா்பு வசதிகள் உள்ளபோதிலும் சொந்த நாட்டு விமானம், எதிரியின் விமானம் என்று எப்படி தவறாகக் கருதப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.