டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு: ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அதிபா் ஜோ பைடன்

News image
அதிபா் ஜோ பைடன்
Updated On :23 டிசம்பர் 2024, 11:25 pm

DIN

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 40 பேரில், 37 பேருக்கு அந்த தண்டனை பரோலில் வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.

அந்த குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவா்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையைப் பகிா்ந்துகொள்கிறேன். இருந்தாலும், மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்தே மத்திய நீதிமன்றங்களால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தன. ஆனால் கடந்த முறை டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தததற்குப் பிறகு, அத்தகைய தண்டனைகளை நிறைவேற்ற கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக டிரம்ப் அடுத்த மாதம் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா். எனவே, அவா் வருவதற்கு முன்னா் மத்திய மரண தண்டனைக் கைதிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.

ஏற்கெனவே, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பொதுமன்னிப்பு வழங்கியது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டா் பைடனுக்கு அவா் பொதுமன்னிப்பு வழங்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.