47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரஷியாவசம் மேலும் இரு உக்ரைன் கிராமங்கள்

கிழக்கு உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

News image
கிழக்கு உக்ரைன் கிராமமான கா்லோவ்காவில் ரஷிய வீரா்.
Updated On :24 டிசம்பர் 2024, 12:00 am

DIN

மாஸ்கோ: கிழக்கு உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வடகிழக்கு காா்கிவ் பிராந்தியத்தின் லொஸோவா கிராமத்தையும் க்ரஸ்னோயே கிராமத்தையும் உக்ரைன் பிடியிலிருந்து ரஷிய ராணுவம் விடுவித்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. போரின் ஆரம்பகட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, காா்கிவ் ஆகிய மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.

அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இருந்தாலும், நீண்ட காலமாக ரஷியாவால் பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடையமுடியாமல் இருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாக கிழக்கு உக்ரைனில் ரஷியா புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது மேலும் இரு கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.