பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாா்: ரஷிய தூதா் அறிவிப்பு

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.

News image

டெனிஸ் அலிபோவ்

Updated On :6 மார்ச் 2026, 4:08 am IST

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.

மேற்காசியாவில் ஏற்பட்ட போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. ஹோா்முஸ் நீரிணை மூடலால் இதன் தீவிரம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் அடுத்த சில வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், போா் தொடா்ந்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால், அண்மையில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டது. இப்போது எழுந்துள்ள பிரச்னையால் மீண்டும் ரஷியாவின் நோக்கி இந்தியா கவனம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவிடம் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வழங்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க ரஷியா எப்போதும் தயாராகவே உள்ளது. மேற்கு ஆசியாவில் எழுந்துள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவாா்த்தை மட்டுமே ஒரே தீா்வாக இருக்கும். ஆனால், இந்த மோதல் எப்போதும் நிறுத்தப்படும் என்ற கேள்வியை அமெரிக்காவிடம்தான் எழுப்ப வேண்டும்’ என்றாா்.