ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என்ஜிஓ-க்கள் பெண்களை பணியிலமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த தலிபானின் உத்தரவைப் பெண்கள் பின்பற்றாததால், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்துமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தலிபான்கள் இன்று வெளியிட்ட கடிதத்தில், ’இந்த உத்தரவிற்கு இணங்கத் தவறினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படுவதற்கான உரிமத்தை இழக்க நேரிடும்.
இதையும் படிக்க | வீடுகளில் ஜன்னல் வைக்க ஆப்கன் அரசு தடை!
ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில், அந்த நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், தலிபான்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களில் பணிபுரிவதை நிறுத்துமாறும் பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்தனர்.
இரு மாதங்களுக்கு முன்னர், பெண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் தொழுகை நடத்தும்போது, ஒருவர் குரலை மற்ற பெண்கள் கேட்கும் வகையில் சப்தமாக குரானை ஓதக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிச் செல்வது முதல் பெண்களுக்கு பல்வேறு தடைகளை பிறப்பித்தனர். இது, ஐ.நா.வின் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. ஆனாலும், தலிபான்களால் பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் தடைகள் தொடர்ந்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு

வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தில் ஆக.10 முதல் 3 நாள்களுக்கு முக்கிய விவாதங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க கொறடா உத்தரவு

சாதி, மதமற்றவர் சான்று: நடிகர் பார்த்திபன் மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



