இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையேயான போரில் பாலஸ்தீன மக்களின் ரத்தம் தினமும் காஸா மண்ணில் வடிந்துகொண்டேயிருக்கிறது. அப்பாவி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எதுவும் காஸாவிற்குள் நுழையாமல் தடுப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
26,000-த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது. அதில் 11,000-த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் என காஸா சுகாதார அமைச்சகம் கண்ணீர் விடுகிறது.
காஸாவில் குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள். தெற்கு காஸாவில் உள்ள பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர் அளவில் வெறும் 2% சதவீதம் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: இலங்கையில் அசோகா் தூண்: இந்திய தூதா் அடிக்கல்
கடந்த மாதம் பாலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது. உலக சுகாதார மையம் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு நாளுக்கு 100 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
காஸாவிற்குள் போதுமான அளவு உணவு, தண்ணீர், எரிபொருள்கள் செல்வதை இஸ்ரேல் கடந்த அக்டோபர் 9-லிருந்து தடுத்துவருகிறது. அவ்வப்போது ஒருசில மனிதநேய உதவிகள் காஸா மக்களுக்கு அனுப்பப்பட்டாலும் போதுமான அளவுக்கான அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

