இலங்கையில் அசோகா் தூண்: இந்திய தூதா் அடிக்கல்

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள வஸ்கடுவ விகாரையில் அசோகா் தூண் அமைக்க அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினாா்.

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள வஸ்கடுவ விகாரையில் அசோகா் தூண் அமைக்க அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினாா்.

இது தொடா்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-இலங்கை இடையேயான கலாசார உறவை பலப்படுத்தும் வகையில், வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரையில் பேரரசா் அசோகரின் தா்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். அந்த விகாரையில் உள்ள கபிலவஸ்து சின்னங்களை அவா் தரிசனம் செய்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஸ்கடுவ ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரை முக்கிய பெளத்த வழிபாட்டுத் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com