எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அவசர மீட்புக் குழுவைக் காணவில்லை!: பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு

ஆறு வயது சிறுமியை மீட்பதற்காக சென்ற பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர மீட்புக் குழுவிடமிருந்து 66 மணிநேரத்திற்குப் பிறகும் எந்தத் தகவலும் வரவில்லை. 

News image
தொலைந்துபோன பணியாளர்கள் | X
Updated On :1 பிப்ரவரி 2024, 1:19 pm

DIN

பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணாமல் போயிருப்பதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆறு வயது சிறுமியை மீட்பதற்காக சென்ற அவசர ஊர்தியுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கள் கிழமை ஹின்ந் எனும் சிறுமி தனது இறந்துபோன பெற்றோருடன் கார் ஒன்றுக்குள் சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில், பாலஸ்தீன செஞ்சுலுவை அமைப்பின் பணியாளர்களான யூசுப் சைனோ மற்றும் அகமது அல் - மதோன் ஆகியோர் அவசர ஊர்தியில் விரைந்தனர்.

66 மணிநேரத்திற்குப் பிறகும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என அந்த அமைப்பு வலைதளத்தில் தெரிவித்துள்ளது. 

பொதுமக்கள், மருத்துவ மற்றும் மனிதநேய உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சர்வதேச அமைப்புகளின் தலையீடு அவசியம் என பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.