தானாகவே இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, பாதுகாப்பு குறைப்பாட்டினால் இதுவரை அமெரிக்காவில் விற்பனை செய்த அனைத்து கார்களுக்கும் புதிய அழைப்பை விடுத்துள்ளது.
காரின் கட்டுப்பாட்டு திரையில் உள்ள சில எச்சரிக்கை விளக்குகள் போதிய அளவில் இல்லை என தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத் துறையின் அறிவுறுத்தலின்பேரில் டெஸ்லா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
டெஸ்லாவின் எஸ், எக்ஸ், வொய், 3, சைபர்டிரக் உள்ளிட்ட அனைத்து கார்களையும் அழைத்துள்ள டெஸ்லா, புதிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு துறை, டெஸ்லா கார்களில் பிரேக், பார்க்கிங், பிரேக் விடுவிப்பு ஆகியவற்றைச் சுட்டும் விளக்குகள் போதியளவில் இல்லை எனத் தெரிவித்துள்ளது. முக்கியமான பாதுகாப்பு சார்ந்த தகவல்களை வாசிக்க இயலாததால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: போர் நிறுத்த உடன்படிக்கை: ஹமாஸ் முடிவு விரைவில் தெரியவரும்!
ஜன.8 ஆம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் எதுவும் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

