இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் காஸா மண்ணில் ரத்தம் காய்ந்தபாடில்லை. இஸ்ரேல் தொடர்ந்து பல போர் குற்றங்களைச் செய்துவருவதாக சர்வதேச அமைப்புகள் ஓயாமல் குற்றம் சாட்டிவருகின்றன. எனினும் இஸ்ரேலின் குண்டு மழை ஓயவில்லை.
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் மக்கள் உயிருக்கு பயந்து தங்குமிடங்களிலிருந்து வெளியில் வருவதில்லை.
அசையும் பொருள்களையும் அனைத்தையும் சுட்டு வீழ்த்தும் டிரோன்களையும் இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில், காஸாவின் கான் யூனிஸ் தெருக்களில் சுற்றித்திருந்த ஆடுகளை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லும் காணொலி வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜசீரா ஊடகம் பதிவிட்ட காணொலி காஸா மக்களின் அவல நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க: ஹமாஸ் முன்மொழியும் மூன்றுகட்ட போர் நிறுத்தம்!
இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவே சாட்சியென பலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

