12 உறவினர்களை சுட்டுக் கொன்ற ஈரானியர்

ஈரானில் தனது தந்தை, சகோதரர் உள்ளிட்ட 12 பேரை 30 வயது நபர் சுட்டுக் கொன்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஈரானில் தனது தந்தை, சகோதரர் உள்ளிட்ட 12 பேரை 30 வயது நபர் சுட்டுக் கொன்றார்.

இது குறித்து அந்த நாட்டின் கெர்மான் பிராந்திய நீதித் துறை தலைவர் இம்பாஹிம் ஹமீதி கூறியதாவது:

தொலைதூரக் கிராமம் ஒன்றில் 30 வயது நபர் தனது உறவினர்களை நோக்கி ஏகே47 துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தாக்குதல் நடத்தியவரின் தந்தை, சகோதரரும் அடங்குவர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என்றார் அவர்.

எனினும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த விவரத்தை அவர் வெளியிடவில்லை. ஈரானின் அண்மைக் கால வரலாற்றில் நடைபெற்றுள்ள மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com