சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

31 ஆயிரம் வான்வழி தாக்குதல்: இஸ்ரேல் தகவல்

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

News image
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்- AP
Updated On :20 பிப்ரவரி 2024, 3:55 pm

DIN

காஸா முழுவதும் இஸ்ரேல் படைகள் ஹமாஸுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வரும் நிலையில், காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் தீவிர தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி, டாங்குகள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு இடத்தில் ஆர்பிஜி ஏவுகணை மற்றும் துப்பாக்கிகள் வைத்திருந்த பயங்கரவாதிகளை மிக நெருங்கிய தூரத்தில் ராணுவ வீரர்கள் கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

அந்த பகுதியிலுள்ள ஹமாஸ் படையினரின் ஆயுத கிடங்கை இஸ்ரேலின் தரைவழி ராணுவப் படை தகர்த்துள்ளது.

அக்.7 போர் தொடங்கியது முதல், இஸ்ரேல் ராணுவம் காஸா மற்றும் லெபனானில் இதுவரை 31 ஆயிரம் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

காஸாவில் பலி எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இஸ்ரேல் தெற்கு நோக்கி தாக்குதலை விரிவுப்படுத்த அங்குள்ள மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.