இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காஸாவில் பலியாகிய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில் இதுவரை 30,035 பேர் உயிரிழந்ததாகவும் 70,457 காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் ஆளுகையில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள், முந்தைய போர்களில் சர்வதேச அமைப்புகளால் உறுதிசெய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் - AP
இந்த எண்ணிக்கையில் போராளிகள், பொதுமக்கள் எத்தனை பேர் என்கிற விவரங்களை அமைச்சகம் குறிப்பிடவில்லை.
அக்.7 ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியாகினர். அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ நடவடிக்கைகள் 5 மாத காலமாக தொடர்ந்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஸா போா் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!

வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் தட்டம்மை பரவல்: 601-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




