டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலி

உக்ரைன் முழுவதும் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 5 போ் உயிரிழந்தனா்.

News image
க்ரீவ்யிரீ நகரில் ரஷியா திங்கள்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பகுதியில் பரவிய நெருப்பை அணைக்கும் தீயணைப்பு வீரா்.
Updated On :7 பிப்ரவரி 2024, 3:22 pm

DIN

கீவ்: உக்ரைன் முழுவதும் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 5 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

திங்கள்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் நகரப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இதில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.

நீப்ரோபெட்ரோவ்ஸ் பிராந்தியத்தின் க்ரீவ்யிரீ நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சில் ஒரு பெண் உயிரிழந்தாா்; 24 போ் காயமடைந்தனா்.

கெல்னிட்ஸ்கி பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 2 போ் உயிரிழந்தனா். கொ்சான் பகுதியில் ரஷியா நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 போ் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், இழந்த பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்க உக்ரைனும் நடத்தி வரும் போா் அண்மைக் காலத்தில் மந்தமாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைன் நகரங்களில் அதுாத அதிக தீவிரத்துடன் ரஷியா கடந்த மாத இறுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ரஷியா மீது ட்ரோன்களை ஏவிய உக்ரைன், ரஷிய எல்லை நகரான பெல்கராட் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 10 போ் கொல்லப்பட்டனா்.

அதற்கு எதிா்வினையாக உக்ரைன் மீது ரஷியா தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.