சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

நடுவானில் தெறித்த விமானக் கதவு: இதுதான் காரணமா?

சோதனையின்போது விமானத்தின் தளர்ந்த உதிரிபாகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

விமானத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரி | AP

Updated On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அலாஸ்கா விமானத்திலிருந்து அவசர கதவு தெறித்து விழுந்த நிகழ்வு குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விமானம் புறப்படுவதற்கு முன்பே கதவைப் பொருத்தியிருந்த திருகுகள் (போல்ட்ஸ்) அதன் இடங்களில் இல்லாமல் போனதா என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்துவருவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் திருகுகள் நழுவியதே கதவு தெறித்து விழுவதற்கான காரணமாக இருந்துள்ளது.

அலாஸ்கா போயிங் விமானம் | AP

அலாஸ்கா போயிங் விமானம் | AP

இந்த நிலையில் அலாஸ்கா மற்றும் யுனைடட்  ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விழுந்த கதவைக் கண்டறிந்துள்ள நிலையில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கதவு முறையாக பொருத்தப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக யுனைடட் நிறுவனம் ஆரம்பகட்ட ஆய்வில் தெரிவித்தது.

சோதனையின்போது சில விமானங்களில் தளர்ந்த உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அலாஸ்கா தெரிவித்துள்ளது.

தெறித்து விழுந்த விமானக் கதவு | AP

தெறித்து விழுந்த விமானக் கதவு | AP

அமெரிக்க பாதுகாப்பு நெறிமுறைகளின்படி 200 இருக்கைகளுக்கு அதிகமாக உள்ள விமானங்களில் அவசர கதவுகள் பொருத்தப்படவேண்டும்.

அலாஸ்கா மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் உபயோகிக்கிற போயிங் விமானத்தில் 180 இருக்கைகளே உள்ள நிலையில் ஒரு அவசரகால கதவுக்கான இடம் மட்டுமே உள்ளது. அந்த இடத்தில் நிரந்தரமாக கதவு போன்ற ஒன்றை பொருத்துகிறார்கள்.

இதனை பராமரிப்பு பணியின்போது திறக்கிறார்கள். விமானம் பறக்கும்போது கதவு நழுவாமல் இருக்க திருகுகள் உபயோகிக்கப்படுகின்றன.

வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது தெறித்த கதவு | AP

வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது தெறித்த கதவு | AP

வெள்ளிக்கிழமை இரவு விமானத்திலிருந்து கதவின் மேற்பகுதியைப் பற்றியிருந்த  பொருத்திகளில் ஒன்று (பிளக்) உடைந்ததால் கதவை விமானத்தின் உடல்பகுதியோடு  தாங்கியிருந்த 12 இணைப்புகளும் உடைந்து விழுந்திருக்கின்றன.

கதவில் பொருத்தப்பட்ட நான்கு திருகுகள் விமானம் புறப்படுவதற்கு முன்பே இல்லாமல் போனதா அல்லது இந்த விபத்தின்போது கழன்றனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமானத்தின் உள்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 171 பயணிகளும் 6 பேர் கொண்ட விமானக் குழுவும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

இந்த நிலையில் மேக்ஸ் 9 விமானங்களைத் தயாரிக்கிற போயிங் நிறுவனத்துக்கு அழுத்தம் உருவாகியுள்ளது. அந்த நிறுவனம் தனது பணியாளர்களை காணொலி கூட்டம் மூலமாக ஒருங்கிணைத்து பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.