உத்தரகண்டில் தான் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையைச் சுத்திகரிக்க பாஜகவினர் வேள்வி நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதான் ஜனநாயகமா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா திடலில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி காங்கிரஸ் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.
இந்த நிலையில், பாஜகவுடன் தொடர்புடைய ஸ்ரீ ராம் சேனை என்ற அமைப்பு, ராம்லீலா திடலில் சுத்திகரிப்பு செய்யும் வேள்வியை நடத்தியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜக மறுத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுமிடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,
”ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நான் உரையாற்றினேன். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது நான் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. அரசின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகளை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.
ஆனால் எனது உரைக்குப் பிறகு, அந்த மேடையைச் 'சுத்திகரிப்பதற்காக' பாஜகவினர் அங்கு ஒரு வேள்வி நடத்தினர். ஜனநாயகத்தில் இதுதான் முறையா? நீங்கள் அரசியலமைப்பை எப்படிக் காப்பாற்றுகிறீர்கள்? நான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று தெரிவித்தார்.
Summary
BJP performs ritual to purify the stage where Kharge participated in a public meeting!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மசோதாக்கள் மாறலாம்; வேறு எதுவும் மாறப் போவதில்லை: கார்கே

கார்கே பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!

மாணவர்களுக்குத் தேவை நீதிதான், ஒடுக்குமுறை அல்ல... கார்கே சரமாரி கேள்வி!

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி: மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




