இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உடனடியாக போரை நிறுத்துமாறு இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.
பெயிஜ்ங்கின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விரிவான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்தைக் கொண்டுவருமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஹமாஸுடனான சண்டையில் காஸா மக்களைத் தண்டிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. போரை நிறுத்தி ஐ.நா அளிக்கும் தீர்மானங்களை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கடைபிடித்து இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்த வகை விடியோக்கள் இனி காண்பிக்கப்படாது: மெட்டா
கடந்த நவம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைக்கு தீர்வுகாண இரு மாநிலத் தீர்வுக்கான வரைபடங்களையும் அட்டவணைகளையும் வகுக்க பாதுகாப்பு கவுன்சிலுக்கு சீனா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் தொடர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுவருகிறது. இதுவரை 23,210-த்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.