ஜப்பானில் தன் நாவல்களைத் திருடி அனிமே (Anime) தயாரித்ததாகக் கூறி அனிமே நிறுவனத்திற்கு நெருப்பு வைத்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. அந்த தாக்குதல் 36 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2019-ல் பிரபல அனிமே தயாரிப்பு நிறுவனமான கியோட்டோ அனிமேசனில் (kyoto animation) ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான வழக்கிற்கு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஷின்ஜி ஆபா எனும் 45 வயது நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு குறைவான தண்டனை வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
இதையும் படிக்க: செங்கடல் தாக்குதல்: மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும்
அனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து அவருக்கு மரண தண்டனை அளித்தது. அந்த விபத்தில் குற்றவாளியும் அதிகமான காயங்களுக்கு உள்ளானார். அவர் மருத்துவமனையில் குணமடைந்த பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போட்டி ஒன்றிற்காக ஒப்படைக்கப்பட்ட தன் நாவல்களை அந்த நிறுவனம் திருடியதால் இந்த குற்றத்தை ஹின்ஜி செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.