மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் : உள்நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென அந்நாட்டின் ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசுயிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

News image
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் / இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2024, 1:10 pm

DIN

மாலே : இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடல்சாா் முக்கிய அண்டை நாடான மாலத்தீவில் அதிபா் தோ்தல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. அத்தோ்தலில் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அதிபா் முகமது சோலியை தோற்கடித்து, மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் கடந்த நவம்பரில் பதவியேற்றாா்.

சீன ஆதரவு நிலைப்பாடு உடையவராக அறியப்படும் இவா், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும் என்று பதவியேற்றவுடன் வலியுறுத்தினாா். மேலும், இந்தியாவுடனான 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்தாா்.

முகமது மூயிஸ் அதிபரான பிறகு இந்தியா - மாலத்தீவு இடையிலான உறவுகளில் சுமுகத்தன்மை இல்லாத நிலையில்,  மாலத்தீவைச் சார்ந்த அமைச்சர்கள் மூவர், பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையிலும், இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இக்கருத்துகள் இருந்தன. இதையடுத்து, இந்தியா்கள் பதிலடி விமா்சனங்களைப் பதிவிட்டதால் சமூக ஊடகங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்தியா மற்றும் பிரதமா் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சா்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அந்நாட்டு எதிா்க்கட்சித் தலைவா்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென அந்நாட்டின் ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசுயிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான மறைமுகமான விமர்சனங்களுக்காகவும் அவர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும்,  இந்தியாவுடனான தூதரக உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படுத்திட மாலத்தீவு அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவும் ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசுயிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.