தென்கொரியாவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் வடகொரியா இரு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
முதல் ஏவுகனை 600 கி.மீ பறந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை 120 கி.மீ பறந்ததாகவும் குறிப்பிடபட்டது. இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதல் குறித்து மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் முடிவு எடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகி 2 நாள்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் மூன்று நாடுகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல் பாதுகாப்பு, நீர்மூழ்கி கப்பல் தடுப்பு மற்றும் கடற்படைத் தாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தென்கொரிய அரசியல் ஆர்வலர்கள் பலூன்களில் துண்டு பிரசுரங்களைக் கட்டி அனுப்பியதற்கு பதிலடியாக கடந்த சில வாரங்களில் வடகொரியாவில் இருந்து குப்பைகளை பலூன்களில் கட்டி தென்கொரிய எல்லைப் பகுதிகள் முழுக்க அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: நெதன்யாகுவின் நிலை என்ன?

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


