150 ஹமாஸ் வீரர்கள், 6 சுரங்கங்கள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் வீரர்கள் அழிப்பு, சுரங்கங்கள் தகர்ப்பு.. பட்டியலிடும் இஸ்ரேல் ராணுவம்


வடக்கு காஸாவில் உள்ள சேஜாயா பகுதியில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் 150-க்கு அதிகமான பயங்கரவாதிகளை கொன்றதாகவும் ஆறு சுரங்கங்களை தகர்த்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜூன் 27-ம் தேதி முதல் முதல்நிலை போர் குழுக்கள் வான்வழியாகவும் தரை வழியாகவும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
ஹமாஸ் தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ளும் பகுதியான சேஜாயாவில் 150-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கண்ணிகள் அமைக்கப்பட்டிருந்த கட்டடங்கள் தகர்ப்பட்டதாகவும் ஆயுதங்கள் மற்றும் உளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவம் தெரிவிக்கிறது.
ஆறு கிமீ நீளம் கொண்ட குறிப்பிடத்தகுந்த 6 சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன. அந்த பகுதிகளில் சோதனைகள் தொடர்ந்துவருகின்றன. சில சுரங்கங்களின் உள்புற வழிகளில் மறைவிடங்களும் கட்டுபாட்டகமும் ஆயுதம், ஆவணங்களும் கண்டறியப்பட்டதாக ராணுவம் குறிப்பிடுகிறது.
அக்.7 ஹமாஸ் இஸ்ரேலும் அத்துமீறி மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலியர் மற்றும் வெளிநாட்டவர் 252 பேர் பிணைக்கைதிகளாக தூக்கி செல்லப்பட்டனர், குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர். இன்னமும் 116 பேர் ஹமாஸ் பிணையில் உள்ளதாக கூறப்படுகிறது. 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...