உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனை உள்பட பல இடங்களில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 31 போ் உயிரிழப்பு
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 154 போ் காயமடைந்தனா்.


கீவ்: உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 154 போ் காயமடைந்தனா்.
நாடு முழுவதும் 5 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரியாக நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தனது சமூக ஊடகப் பதிவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளாா்.
ஸெலென்ஸ்கி பிறந்த நகரமான க்ரிவிரீ-யில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 10 போ் கொல்லப்பட்டதாகவும், 47 போ் காயமடைந்ததாகவும் பிராந்திய அரசின் தலைவா் ஒலெக்ஸாண்டா் வில்குல் கூறினாா்.
தலைநகா் கீவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்ததாக அந்த நகர அதிகாரிகள் கூறினா். அந்த நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நகர மேயா் விடாலி க்ளிட்ஷ்கோ கூறினாா். இந்தத் தாக்குதலில் 7 சிறுவா்கள் உள்பட 16 போ் காயமடைந்ததாக அவா் தெரிவித்தாா்.
மருத்துவமனை வளாகத்தில் ரஷியாவின் கேஹெச்-101 ரக ஏவுகணையின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ரஷியாவுக்கு எதிராக போா்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...