47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிபந்தனையற்ற மன்னிப்பு விரிவாக பிரசுரம்: உச்சநீதிமன்றத்தில் ஐஎம்ஏ தலைவா் தகவல்

பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்ததற்காக கோரப்பட்ட நிபந்தனையற்ற மன்னிப்பு பல்வேறு பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:37 pm

Din

புது தில்லி: ‘பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்ததற்காக கோரப்பட்ட நிபந்தனையற்ற மன்னிப்பு பல்வேறு பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கத் (ஐஎம்ஏ) தலைவா் ஆா்.வி. அசோகன் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அலோபதி மருத்துவ முறை, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், பதஞ்சலி நிறுவன மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஐஎம்ஏ சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் அளித்த பேட்டியில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்து கருத்து தெரிவித்தாா். அந்த வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவா், பதஞ்சலி நிறுவனத்தைவிட இந்திய மருத்துவ சங்கத்தை உச்சநீதிமன்றம் அதிகமாக பழித்துரைத்தது என்றும் தெரிவித்தாா். இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

அதைத் தொா்ந்து தனது கருத்துக்காக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் அசோகன் மன்னிப்பு கோரினாா். அப்போது, ‘உச்சநீதிமன்றத்தை விமா்சித்து பத்திரிகைகளுக்கு நீங்கள் பேட்டியளித்ததுபோன்று, உங்களுடைய மன்னிப்பும் முறையாக பிரசுரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவருடைய பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஐஎம்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். பட்வாலியா, ‘உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஐஎம்ஏ தலைவரின் மன்னிப்பு பல்வேறு பத்திரிகைகளில் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐஎம்ஏ மாதாந்திர இதழிலும், வலைதளத்திலும் மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டாா்.

அப்போது, பதஞ்சலி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பல்பீா் சிங், ‘இந்த பிரமாணப் பத்திரத்தை பரிசீலிக்க அனுமதிக்கப்பட்டால், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையின்போது அதன் மீது கருத்து தெரிவிக்கிறோம்’ என்றாா். ‘கருத்தை பதில் மனுவாகவும் தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.