ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

இராக் அல்-பாக்தாதி மனைவிக்கு மரண தண்டனை

2019-இல் அமெரிக்க சிறப்புப் படையினரால் சிரியாவில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாா்.

News image
Updated On :12 ஜூலை 2024, 12:05 am

Din

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பை நிறுவிய அபு பக்கா் அல்-பாக்தாதியின் மனைவி அஸ்மா முகமதுக்கு இராக் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இராக்கிலும் சிரியாவிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் அமைப்பு, இராக்கின் சிஞ்சாா் பகுதியில் ஆயிரக்கணக்கான யாஜிதி இனத்தவா்களை கொடூரமாகக் கொன்று குவித்தது.

அப்போது யாஜிதி பெண்களை தனது இல்லத்தில் அடைத்துவைத்து, பாலியல் அடிமைகளாக்கிய குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐஎஸ் நிறுவனா் அல்-பாக்தாதியின் மனைவிகளில் ஒருவரான அஸ்மாவுக்கு மரண தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

2019-இல் அமெரிக்க சிறப்புப் படையினரால் சிரியாவில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாா்.