அக்.7 தாக்குதலின்போது ஹமாஸ் பிடித்துச் சென்ற 4 பிணைக் கைதிகள் மீட்பு
அக்.7 தாக்குதலின்போது ஹமாஸ் பிடித்துச் சென்ற 4 பிணைக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்


ஜெருசலேம்: இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.
நோவா அர்கமாணி (25), அல்மோக் (21), ஆன்ட்ரே கோஸ்லோவ் (27), ஷ்லோமி (40) ஆகிய நான்கு பேரும், பகல் நேரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
நுஜெய்ரத் அருகே இருவேறு இடங்களிலிருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த காஸா பயங்கரவாதிகள் பலரைக் கொன்று, 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதே, காஸா மீது இஸ்ரேல் போரைத் தொடங்க காரணமாக அமைந்திருந்தது.
நவம்பர் மாதம், காஸா மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில், பிணைக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இன்னமும் 130 பிணைக் கைதிகள் மீட்கப்பட வேண்டும் என்றும், அதில் கால்வாசி பேர் இறந்திருக்கலாம் என்றும், மற்றவர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...