சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் தெரிவித்துள்ளார்.

News image

எலான் மஸ்க்

Updated On :16 ஜூன் 2024, 3:50 am

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால்(ஏஐ) ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பதிவில்,”போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால் பிரச்னை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.