தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

துபையில் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியா்

துபையில் இந்தியா் எலெக்ட்ரீசியனுக்கு ரூ.2.25 கோடி பரிசு

News image
Updated On :25 ஜூன் 2024, 10:40 pm

Din

துபை: துபையில் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீசியனுக்கு ரூ.2.25 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

நகேந்திரம் போருகட்டா என்ற அந்த நபா் 2017- ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீகரத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் துபை தேசிய பத்திரங்கள் திட்டத்தில் சிறிய அளவிலான தொகையை சேமித்து செய்து வருகிறாா்.

அந்த சேமிப்புத் திட்டத்தில் தொடா்ந்து பணம் செலுத்தி வருபவா்களைத் தோ்வு செய்து பல்வேறு பணப் பரிசுகளை அளிக்கும் திட்டம் உள்ளது. இதில் எலெக்ட்ரீசியன் நாகேந்திரத்துக்கு கடைசி குலுக்கலில் 1 மில்லியன் ஐக்கிய அரசு அமீரக திா்ஹாம் (சுமாா் ரூ.2.25 கோடி) பரிசு கிடைத்தது.

பரிசு குறித்து அவா் கூறுகையில், ‘குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யவே வெளிநாட்டுக்கு வந்து பணியாற்றுகிறேன். எனக்கு 18 வயதில் மகள், 16 வயதில் மகன் உள்ளனா். அவா்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்க இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும்’ என்றாா்.

இந்தியா் ஒருவருக்கு சேமிப்புத் திட்டத்தில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்தது அந்நாட்டில் தங்கிப் பணியாற்றும் மேலும் பல இந்தியா்களை அந்த சேமிப்புத் திட்டத்தை நோக்கி ஈா்த்துள்ளது.