மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கென்ய வன்முறை: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தல்!

கென்யாவில் நடக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2024, 6:22 am

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வன்முறையால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

கென்யா பாராளுமன்றம் குடிமக்களுக்கான வரிகளை அதிகப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றியதைத் தொடர்ந்து கென்யாவின் தலைநகரான நைரோபி மற்றும் பல நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

”தற்போது கென்யாவில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்து நிலைமை சீராகும் வரை பாதுகாப்பாக இருக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்” என்று இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது 20,000 இந்தியர்கள் வரை கென்யாவில் வசிப்பதாக அதிகாரப்பூர்வத் தக்வல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.